உள்ளூர் செய்திகள்

நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்ட காட்சி.

பல்லடம் அருகே எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி

Published On 2023-01-19 10:42 GMT   |   Update On 2023-01-19 10:42 GMT
நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ,. எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ, வழங்கினர்.

பல்லடம்:

பல்லடம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில், கரைப்புதூர் ஊராட்சி, என்.எஸ்.கே. நகர் கிளையில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106வது பிறந்தநாளை முன்னிட்டு 300 பேருக்கு சேலை,வேட்டிகளும், 500 பேருக்கு அன்னதானமும் வழங்கபட்டது. மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி இணை செயலாளர் மிருதுளா நடராஜன் தலைமை வகித்தார். நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ,. எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ, வழங்கினர்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. கே. பி. பரமசிவம், மாவட்ட அவைத் தலைவர் சிவாச்சலம், வக்கீல் கே.என்.சுப்பிரமணியம், இளைஞர்அணி மோகன்ராஜ், தண்ணீர்பந்தல் நடராஜன், கரைப்புதூர் விஸ்வநாதன், பாசறை சதிஷ் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News