உள்ளூர் செய்திகள்

 கிளைக்கால்வாயில் தண்ணீர் செல்லும் காட்சி.

புதுப்பாளையம் கிளைக்கால்வாயில் தண்ணீர் திறப்பு

Published On 2022-09-21 07:48 GMT   |   Update On 2022-09-21 07:48 GMT
  • 7,219 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
  • கடைமடை வரை பாசனத்துக்கு தண்ணீர் கிடைப்பதை பொதுப்பணித்துறையினர் உறுதி செய்ய வேண்டும்.

உடுமலை :

பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்தில், உடுமலை புதுப்பாளையம் கிளைக்கால்வாய் வாயிலாக 7,219 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.கால்வாயில் முதல் சுற்றுக்கு அக்டோபர் 28ல் தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த வாரம் முதல் சுற்று நிறைவு பெற்றது. இந்நிலையில் இரண்டாம் சுற்றுக்கு, பிரதான கால்வாயில் பூசாரிபட்டி ஷட்டர் வழியாக, புதுப்பாளையம் கிளைக்கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது :- முதல் சுற்று தண்ணீர் திறப்பின் போது, தொடர் மழை பெய்தது. தற்போது மழை இடைவெளி விட்டுள்ளதால், கடைமடை வரை பாசனத்துக்கு தண்ணீர் கிடைப்பதை பொதுப்பணித்துறையினர் உறுதி செய்ய வேண்டும்.மேலும் போதிய இடைவெளி இல்லாமல், தண்ணீர் திறக்கப்படுவதால், மக்காச்சோள பயிர்கள் கதிர் பிடிக்கும் போது போதுமான தண்ணீர் வழங்கவும் அதிகாரிகள் திட்டமிட வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News