உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

75 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை - விஷ்வ இந்து பரிஷத் முடிவு

Published On 2022-07-28 07:06 GMT   |   Update On 2022-07-28 07:06 GMT
  • ஆகஸ்டு 14-ந் தேதி முதல், 16-ந் தேதி வரை நிர்வாகிகள் அனைவரும் தனது வீட்டின் முன் தேசியக்கொடி ஏற்ற வேண்டும்.
  • ஆலயங்களை இடிக்கும் திட்டங்களை உடனடியாக அரசு கைவிட வேண்டும்.

திருப்பூர் :

தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் பூஜாரிகள் மற்றும் பூ கட்டுவோர் பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அனுப்பர்பாளையத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் திருச்செல்வம் தலைமை வகித்தார்.

செயலாளர் சிவா முன்னிலை வகித்தார். மாவட்ட துணை அமைப்பாளர் வெள்ளமுத்து வரவேற்றார். மாநில இணை பொது செயலாளர் விஜயகுமார், கோட்ட அமைப்பாளர் குமரவேல் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் ஆகஸ்டு 14-ந்தேதி முதல், 16ந்தேதி வரை நிர்வாகிகள் அனைவரும் தனது வீட்டின் முன் தேசியக்கொடி ஏற்ற வேண்டும். கோகுலாஷ்டமி விழாவை முன்னிட்டு குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்துவது.விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திருப்பூரில் 75 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்வது, சாலை விரிவாக்கம் என்ற பெயரில்இந்து ஆலயங்களை இடிக்கும் திட்டங்களை உடனடியாக அரசு கைவிட வேண்டும்உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News