உள்ளூர் செய்திகள்
ஆலோசனைக் கூட்டத்தின் காட்சி.
வெள்ளகோவிலில் கட்டட கலைஞர்கள் நல சங்க ஆலோசனைக் கூட்டம்
- கட்டட கலைஞர்கள் நல சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
- தொழிலாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
வெள்ளகோவில்:
வெள்ளகோவிலில் கட்டட கலைஞர்கள் நல சங்க ஆலோசனைக் கூட்டம் நேற்று சட்ட ஆலோசகர் வக்கீல் வி.கந்தசரவணகுமார் தலைமையில், நிறுவனத் தலைவர் எஸ்.கண்ணன், நகரச் செயலாளர் எல்.சந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த
ஆலோசனைக் கூட்டத்தில், கடந்த ஒரு வாரங்களுக்கு மேலாக கல்குவாரிகள் வேலை நிறுத்த போராட்ட த்தில் ஈடுபட்டு உள்ளதால், கட்டுமான தொழிலுக்கு தேவையான எம்சாண்ட் மற்றும் ஜல்லி வகைகள் கிடைக்காத சூழ்நிலையில் கட்டிடப் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதனால் தொழிலாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. தொழிலாளர்களின் நலன் கருதி அரசு உடனே நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் கட்டட கலைஞர்கள் நல சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டனர்.