உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

பாலிதீன் கவர்கள் பயன்படுத்தினால் கடையின் உரிமம் ரத்து - நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை

Published On 2023-10-14 15:44 IST   |   Update On 2023-10-14 15:44:00 IST
  • பிளாஸ்டிக் பைகள் எனப்படும் நெகிழிகளை பயன்படுத்துவதை தடுக்கும் நடவடிக்கையாக நகராட்சி அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது.
  • தொடர்ந்து உபயோகிப்பது கண்டறியப்பட்டால் கடையின் உரிமத்தை ரத்து செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

காங்கயம் : 

திருப்பூர் மாவட்டம் காங்கயம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் வணிக வளாக கடைகளில் பிளாஸ்டிக் பைகள் எனப்படும் நெகிழிகளை பயன்படுத்துவதை தடுக்கும் நடவடிக்கையாக நகராட்சி அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் சூரியப்பிரகாஷ் தலைமை தாங்கினார். ஆணையர் கனிராஜ் முன்னிலை வகித்தார். துப்புரவு ஆய்வாளர் சரவணன் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள், கடைக்காரர்கள், வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் காங்கயம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக வளாகக் கடைகள், ஓட்டல், பேக்கரி, பூக்கடை மற்றும் சாலையோர கடைகள் என அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் கவர்கள் இருப்பது கண்டறியப்பட்டால் பறிமுதல் செய்வதுடன் அபராதம் விதிக்கப்படும் எனவும் தொடர்ந்து உபயோகிப்பது கண்டறியப்பட்டால் கடையின் உரிமத்தை ரத்து செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆணையாளர் அறிவுறுத்தினார்.இதனை தடுக்கும் நடவடிக்கையாக காங்கயம் பஸ் நிலையம் பகுதிகளில் தீவிரமாக கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News