உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

உடுமலையில் பி.ஏ.பி., கிளை கால்வாய்களில் நீர் திருட்டை தடுக்க வலியுறுத்தல்

Published On 2022-10-09 06:07 GMT   |   Update On 2022-10-09 06:07 GMT
  • இரண்டாம் மண்டல பாசனத்திற்கு அணையிலிருந்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
  • நிலைப்பயிராக மக்காச்சோளம் உள்ளிட்ட சாகுபடிகள் உள்ளன.

உடுமலை :

பி.ஏ.பி., கிளை கால்வாய்களில் இரண்டாம் மண்டல பாசனத்திற்கு இரண்டாம் அணையிலிருந்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. நிலைப்பயிராக மக்காச்சோளம் உள்ளிட்ட சாகுபடிகள் உள்ளன.

போதிய மழை இல்லாத காரணத்தால் பயிர்களுக்கு கூடுதலாக தண்ணீர் பாய்ச்ச வேண்டியுள்ளது. இந்நிலையில் உடுமலை கால்வாய் உள்ளிட்ட கால்வாய்களில் தண்ணீர் திருட்டு காரணமாக கடைமடை பகுதிக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது.குறித்த நேரத்தில் தண்ணீர் நீரிட விலையெனில் பயிர்கள் கருகி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தண்ணீர் திருட்டை தடுக்க பொதுப்பணித்துறையினர் போலீஸ் உள்ளடக்கிய கண்காணிப்பு குழு அமைத்து ரோந்து செல்ல வேண்டும் தண்ணீர் திருட்டை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News