உள்ளூர் செய்திகள்

பஞ்சலிங்க அருவி.

பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

Published On 2023-06-24 11:59 IST   |   Update On 2023-06-24 11:59:00 IST
  • தென்மேற்கு பருவமழை தொடங்குவதிலும் தாமதம் நிலவி வருகிறது.
  • சுற்றுலா பயணிகள் அதிகம் வராததால் திருமூர்த்திமலையில் உள்ள குரங்குகளுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.

தளி:

உடுமலை வனச்சரகத்தில் உள்ள பஞ்சலிங்க அருவிக்கு முற்றிலுமாக நீர்வரத்து குறைந்து விட்டது. தென்மேற்கு பருவமழை தொடங்குவதிலும் தாமதம் நிலவி வருகிறது. இதனால் அருவியில் குளிப்பதற்காக வருகின்ற சுற்றுலா பயணிகள், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.இதன் காரணமாக அருவி பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்த அளவே காணப்படுகிறது.

அதைத் தொடர்ந்து அணை அருகே உள்ள நீச்சல் குளத்துக்கு செல்லும் பயணிகள் குழந்தைகளுடன் குளித்து மகிழ்கின்றனர். இதனால் நீச்சல் குளத்தில் ஓரளவுக்கு கூட்டம் இருந்து வருகிறது. சுற்றுலா பயணிகள் அதிகம் வராததால் திருமூர்த்திமலையில் உள்ள குரங்குகளுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.

Tags:    

Similar News