உள்ளூர் செய்திகள்

சங்கீதா. இளங்கோ.

திருப்பூர் மாவட்ட சி.ஐ.ஐ புதிய தலைவர்கள் தேர்வு

Published On 2023-03-06 06:36 GMT   |   Update On 2023-03-06 06:36 GMT
  • திருப்பூர் கிளை, கடந்த 2013ல் உருவாக்கப்பட்டது.
  • புதிய நிர்வாகிகளுக்கு, முன்னாள் தலைவர் மில்டன் பதவிபிரமாணம் செய்துவைத்தார்.

திருப்பூர் :

இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ.,) திருப்பூர் கிளை, கடந்த 2013ல் உருவாக்கப்பட்டது. தற்போது, தொழில் துறையினர் 84 பேர், உறுப்பினராக உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

அந்தவகையில், சி.ஐ.ஐ., திருப்பூர் மாவட்ட கிளைக்கு, 2023 - 24ம் ஆண்டுக்கான புதிய தலைவராக பி.கே.எஸ்., டெக்ஸ்டைல்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் சங்கீதா; துணை தலைவராக அகில் அப்பேரல் எக்ஸ்போர்ட்ஸ் நிர்வாக இயக்குனர் இளங்கோ ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு ள்ளனர். புதிய நிர்வாகி களுக்கு, முன்னாள் தலைவர் மில்டன் பதவிபிரமாணம் செய்துவைத்தார்.

திருப்பூரில் சி.ஐ.ஐ., கிளை துவங்கப்பட்டு, பத்து ஆண்டுகள் ஆன நிலையில், முதல்முறையாக தற்போது, ஒரு பெண் தொழில்முனைவோர், கூட்டமைப்பின் தலைவராக நியமிக்க ப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News