உள்ளூர் செய்திகள்

 பூமிபூஜை விழா நடைபெற்ற காட்சி.

திருப்பூர் 22-வது வார்டில் மறுதார்தளம் அமைக்கும் பணி - மண்டல தலைவர்கள் தொடங்கி வைத்தனர்

Published On 2023-06-15 06:49 GMT   |   Update On 2023-06-15 06:49 GMT
  • பிச்சம்பாளையம் விரிவு முதல் வீதியில் ரூ.8 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பில் மறுதார்தளம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
  • பூமிபூஜை விழா 22-வது வார்டு கவுன்சிலர் தலைமையில் நடைபெற்றது.

திருப்பூர் :

திருப்பூர் மாநகராட்சி 22-வது வார்டுக்குட்பட்ட சிங்காரவேலன் நகர் பகுதியில் ரூ.28 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பிலும், பிச்சம்பாளையம் விரிவு முதல் வீதியில் ரூ.8 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலும் மறுதார்தளம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

இதற்கான பூமிபூஜை விழா 22-வது வார்டு கவுன்சிலர் வி.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் 1-வது மண்டல தலைவர் உமாமகேஸ்வரி சிட்டி வெங்கடாசலம், 2-வது மண்டல தலைவர் தம்பி கோவிந்தராஜ் ஆகியோர் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மாநகராட்சி உதவி கமிஷனர் சுப்பிரமணியம், இளநிலை பொறியாளர் கணேஷ், 22-வது வட்ட தி.மு.க. செயலாளர் ராஜ்குமார், தி.மு.க. நிர்வாகிகள் சரவணகுமார், திராவிட பாலு, தங்கராஜ், வேலுச்சாமி, பழனிச்சாமி, வினோத், ராஜேந்திரன், புஷ்பா, ஈஸ்வரி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News