உள்ளூர் செய்திகள்

கருப்பு பேட்ஜ் அணிந்து வந்திருந்த ஆசிரியர்கள்.

வெள்ளகோவிலில் ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்

Published On 2023-03-24 08:30 GMT   |   Update On 2023-03-24 08:30 GMT
  • ஆசிரியர்கள் பணி பாதுகாப்பு சட்டம் இயற்றிட கோரி கருப்பு பட்டை அணிந்து பணிக்கு வந்திருந்தனர்.
  • பள்ளிகளில் ஆசிரியர்கள் கருப்பு பட்டை அணிந்து பணிக்கு வந்ததாக தெரிவித்தனர்.

வெள்ளகோவில் :

வெள்ளகோவிலில் உள்ள அரசு பள்ளிகளில் பணியா ற்றும் ஆசிரியர்கள் பணி பாதுகாப்பு சட்டம் இயற்றிட கோரி கருப்பு பட்டை அணிந்து பணிக்கு வந்திருந்தனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டம், புதூர் ஒன்றியம் கீழநம்பிபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றி வந்த தலைமை ஆசிரியர் குருவம்மாள், உதவி ஆசிரியர் பரத் ஆகியோர் தாக்கப்பட்டதை கண்டித்தும், ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றிடக் கோரி வெள்ளகோவில் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் ஆசிரியர்கள் கருப்பு பட்டை அணிந்து பணிக்கு வந்ததாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News