உள்ளூர் செய்திகள்

பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்ற காட்சி.

உடுமலை பகுதியில் கணக்கெடுக்கும் பணி - 31 வகையான நிலவாழ் பறவைகள் கண்டுபிடிப்பு

Published On 2023-03-06 05:16 GMT   |   Update On 2023-03-06 05:16 GMT
  • பறவைகள் கணக்கெடுப்பானது இரு நாட்கள் நடந்தது.
  • கணக்கெடுப்பு பணி காலை, 6.30 மணி முதல், 11.00 மணி வரை நடைபெற்றது.

திருப்பூர் :

தமிழகத்தில் ஒருங்கிணைந்த நில வாழ் பறவைகள் கணக்கெடுப்பா னது, வனப்பகுதி மற்றும் வனத்தை ஒட்டிய கிராமங்கள் மற்றும் நகரங்கள் போன்ற பகுதிகளில், இரு நாட்கள் நடந்தது. நில வாழ் பறவைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உடுமலை பகுதியில் நடந்த, கணக்கெடுப்பு பணியில் வனத்துறை பணியாளர்கள், தன்னார்வு தொண்டு நிறுவனத்தினரின் குழுவும் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

கணக்கெடுப்பு பணி காலை, 6.30 மணி முதல், 11.00 மணி வரை நடைபெற்றது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள், வனப்பகுதி களுக்கு அருகிலுள்ள கிராமப்பகுதிகளில் மற்றும் சிறிய மற்றும் பெரிய நகரங்கள் போன்றவற்றிலும் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

திருப்பூர் வனக்கோட்ட உதவி வன பாதுகாவலர் கணேஷ்ராம் தலைமையில், உயிரியலாளர் மகேஷ்கு மார்,- பறவைகள் ஆர்வலர் பிளஸ்சோயேசுடியான்-, வனக்காவலர் லட்சுமணன்-, வேட்டை தடுப்பு காவலர் பிரகாஷ்- ஆகியோர் கொண்ட குழு திருமூர்த்திமலை முதல் பொன்னாலம்மன் சோலை வரை உள்ள பகுதியில் கணக்கெடுப்பு மேற்கொண்டனர்.

இதில், 31 வகையான நிலவாழ் பறவைகள் பதிவு செய்யப்பட்டது. செந்தலைப்பஞ்சுருட்டான், நீலவால் பஞ்சுருட்டான், பச்சை பஞ்சுருட்டான், வெள்ளைப்புருவ சின்னான், வால் காகம், பட்டாணி குருவி, நீல முக செண்பகம், கொண்டை பாம்பு கழுகு, வல்லூறு, பனை உழவாரன், மைனா, வெண்புருவ வாலாட்டி, வெண் கண்ண குக்குறுவான், பச்சை சிட்டு, மரம் கொத்தி, காட்டு சிலம்பன்கள், தையல்காரி, செண்பகம், தேன் சிட்டு, அக்காகுயில் மற்றும் தேன் பருந்து ஆகிய பறவையினங்கள் பதிவு செய்யப்பட்டன.

Tags:    

Similar News