உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் 'ஸ்டெம்' திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் - தன்னார்வலர்கள் வலியுறுத்தல்

Published On 2023-06-08 11:10 IST   |   Update On 2023-06-08 11:10:00 IST
  • வானவில் மன்றம் கடந்தாண்டு தொடங்கப்பட்டது.
  • அரசுபள்ளி மாணவர்களின் ஈடுபாடு அதிகம் இருந்தது.

தாராபுரம் :

அரசு பள்ளிகளில் மாணவர்களின் கண்டுபிடிப்பு திறனை ஊக்குவிக்க வானவில் மன்றம் கடந்தாண்டு தொடங்கப்பட்டது. இந்த மன்றத்தின் முக்கிய செயல்பாடாக அறிவியல், தொழில்நுட்பம், என்ஜினீயரிங், கணித கருத்துகளை செயல்வழியில் விளக்க ஸ்டெம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.இந்த திட்டத்தின் செயல்பாடுகளை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விளக்க தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டனர்.வானவில் மன்றத்தின் நோக்கம் மாணவர்களை சென்றடைந்ததை உறுதி செய்ய, மாநில அளவில் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் அரசுபள்ளி மாணவர்களின் ஈடுபாடு அதிகம் இருந்ததால் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.இதுகுறித்து ஸ்டெம் திட்ட தன்னார்வலர்கள் கூறுகையில், பள்ளிக்கல்வித்துறை இந்தத் திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் செயல்படுத்தினால் அனைத்து தரப்பு மாணவர்களும் பலனடைவர் என்றனர். 

Tags:    

Similar News