உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

உடுமலையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் வாபஸ்

Published On 2023-06-03 08:04 GMT   |   Update On 2023-06-03 08:04 GMT
  • உடுமலை நகராட்சியில் 5 டிவிசன்கள் 33 வார்டுகள் உள்ளன.
  • தினசரி ரூ.340 ஊதியம் வழங்கப்படுகிறது.

உடுமலை :

உடுமலை நகராட்சியில் 5 டிவிசன்கள் 33 வார்டுகள் உள்ளன. மொத்தம் 240 தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றுகின்றனர்.இவர்களுக்கு தினசரி ரூ 340 ஊதியம் வழங்கப்படுகிறது, ஞாயிறு விடுமுறை அளிக்கப்படுகிறது.

இதன் மூலம் மாதம் சுமார் ரூபாய் 8000 ஊதியமாக பெறுகின்றனர். இந்நிலையில் புதிதாக வந்துள்ள ஒப்பந்த நிறுவனம் 90 பேரை ஆள் குறைப்பு செய்யும் நடவடிக்கையில் இறங்கி உள்ளதாக கூறி பணியாளர்கள் உடுமலை நகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி அலுவலகம் முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நகராட்சி தலைவர் தொழிலாளர்கள் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தினார். அனைத்து பணியாளர்களுக்கும் வேலை வழங்கப்படும் .யாரும் நீக்கப்பட மாட்டார்கள். தகுந்த ஊதியம் வழங்கப்படும் என உறுதி அளித்தார்.அப்போது நகராட்சி அதிகாரிகள் நாட்ராயன், சிவகுமார், செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர். இதையடுத்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.

Tags:    

Similar News