உள்ளூர் செய்திகள்

விற்பனைக்கு வந்த சூரியகாந்தி விதை மூட்டைகள். 

வெள்ளகோவிலில் ரூ.25 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

Published On 2023-03-24 08:00 GMT   |   Update On 2023-03-24 08:00 GMT
  • 51 ஆயிரத்து 413கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
  • சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.51.39க்கும், குறைந்தபட்சம் ரூ.42.19க்கும் கொள்முதல் செய்தனர்.

வெள்ளகோவில் :

வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வார ம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பும், வியாழனன்று சூரியகாந்தி விதையும் ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை. திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்து விற்று செல்கிறார்கள். நேற்று வியாழக்கிழமை 61 விவசாயிகள் கலந்து கொண்டு 51 ஆயிரத்து 413கிலோ சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர், இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த 11வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ரூ.51.39க்கும், குறைந்தபட்சம் ரூ.42.19க்கும் கொள்முதல் செய்தனர்.

நேற்று மொத்தம் ரூ.24லட்சத்து 58ஆயிரத்து 480க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை க்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்து ள்ளார்.

Tags:    

Similar News