உள்ளூர் செய்திகள்

பழையக்கோட்டை சந்தையில் விற்பனைகாக கொண்டுவரப்பட்ட காங்கயம் இன மாடுகளை படத்தில் காணலாம்.

சூடு பிடிக்கும் நாட்டு மாடுகள் விற்பனை - பழையக்கோட்டை சந்தையில் அலைமோதும் வியாபாரிகள்

Published On 2022-08-09 06:54 GMT   |   Update On 2022-08-09 06:54 GMT
  • காங்கயம் இன மாடுகள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகிறது.
  • இடைத்தரகர் இல்லாத சந்தை என்பதால் விவசாயிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

காங்கயம் :

திருப்பூர் மாவட்டம் காங்கயம் நத்தக்காடையூர் பழையகோட்டையில் காங்கயம் இன மாடுகளுக்கான சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் காங்கயம் இன மாடுகள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகிறது.இதில் இடைத்தரகர் இல்லாத சந்தை என்பதால் விவசாயிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது. மாட்டுச்சந்தையில் மாடுகளுக்கு நல்ல விலை கிடைக்கிறது. வாரச்சந்தையில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், நாமக்கல், போன்ற மாவட்டங்களிலிருந்து விற்பனைக்காக விவசாயிகள் மாடுகளை கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து மாடுகளை வாங்க விவசாயிகள் வருகின்றனர். மாடுகளை விற்கும் விவசாயிகளும் வாங்கும் விவசாயியும் நேரடியாக விலை நிர்ணயித்து கொள்வது இந்த சந்தையின் தனி சிறப்பு. நேற்று முன்தினம் நடைபெற்ற சந்தையில் 84 கால்நடைகள் வந்திருந்தன. இதில் காங்கயம் இன மாடுகள் ரூ.25 ஆயிரம் முதல் அதிகபட்சமாக 67 ஆயிரம் ரூபாய் வரை விற்றது. பசுங்கன்றுகள் ரூ.10ஆயிரம் முதல் ரூ.35 வரை விற்பனையானது. காளை கன்றுகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ40 ஆயிரம் வரை விற்க்கப்பட்டது.

இன்று நடைபெற்ற சந்தையில் 54 கால்நடைகள் ரூ.17 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றது என சந்தை மேற்பார்வையாளர்கள் தெரிவித்தனர். தற்போது நாட்டு மாடுகள் குறித்த விழிப்புணர்வு அதிகம் ஏற்பட்டு வரும் நிலையில் இந்த சந்தையில் மாடுகள் அதிக அளவில் விற்பனையாகி வருவது மாடுகள் விற்பனை அதிகரித்துள்ளதை காட்டுகிறது.

Tags:    

Similar News