உடுமலையில் தனியார் நிறுவனத்தில் ரூ.4.12 லட்சம் கொள்ளை
- ஆன்லைன் பொருட்களை டெலிவரி செய்யும் ஏஜென்சி நடத்தி வருகிறார்.
- போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
உடுமலை :
உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் - குமரலிங்கம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி (32). இவர் எலையமுத்தூர் பிரிவில் அரசு கலைக் கல்லூரி செல்லும் வழியில் ஆன்லைன் பொருட்களை டெலிவரி செய்யும் ஏஜென்சி நடத்தி வருகிறார். பாலாஜி சம்பவத்தன்று வேலையை முடித்துக் கொண்டு வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார் பின்னர் காலை அவர் வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த பாலாஜி உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவுக்குள் இருந்த ரொக்கம் ரூ 4 லட்சத்து12 ஆயிரம் வைக்கப்பட்டிருந்த லாக்கர் மற்றும் கண்காணிப்பு கேமராக்களின் நிகழ்வுகள் பதிவாகும் பெட்டி உள்ளிட்டவற்றை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து பாலாஜி உடுமலை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு ஏதுவாக தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை பதிவுகளும் எடுக்கப்பட்டு உள்ளது. தனியார் நிறுவனத்தின் பூட்டு உடைக்கப்பட்டு பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.