உள்ளூர் செய்திகள்

ரேக்ளா பந்தயம் நடைபெற்ற காட்சி.

தாராபுரத்தில் ரேக்ளா பந்தயம்

Published On 2023-01-22 10:01 GMT   |   Update On 2023-01-22 10:01 GMT
  • இரண்டு மாடுகள் பூட்டப்பட்டு 200 மீட்டர் ,300 மீட்டர் என இரு வகைகளாக பிரிக்கப்பட்டு பந்தயங்கள் நடைபெற்றது.
  • 280 ரேக்ளா வண்டிகளில் இரண்டு மாடுகள் பந்தயங்கள் நடைபெற்றது.

தாராபுரம் :

தாராபுரத்தில் ரேக்ளா கிளப் மற்றும் விவசாயிகள் சார்பில் 10ம் ஆண்டு ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. ராமகிருஷ்ணா நல்லம்மை பாலிடெக்னிக் கல்லூரி அருகில் நடைபெற்ற பந்தயத்தில் தாராபுரம் ,பழனி, சத்திரப்பட்டி ,திருப்பூர்,பொள்ளாச்சி, காங்கேயம், சங்கரண்டாம்பாளையம், புளியம்பட்டி, சோமனூர், அன்னூர், சத்தியமங்கலம், என 50க்கும் மேற்பட்ட ஊர்களில் இருந்து வந்திருந்த 280 ரேக்ளா வண்டிகளில் இரண்டு மாடுகள் பூட்டப்பட்டு 200 மீட்டர் ,300 மீட்டர் என இரு வகைகளாக பிரிக்கப்பட்டு பந்தயங்கள் நடைபெற்றது.

நிகழ்ச்சியை ராமகிருஷ்ணா நல்லம்மை பாலிடெக்னிக் தாளாளரும் ,பழனி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே. எஸ். என். வேணுகோபாலு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். தி.மு.க. மாவட்ட பிரதிநிதி ஆபீஸ் தோட்டம் செல்லமுத்து மற்றும் நஞ்சியம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ரஜினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News