உள்ளூர் செய்திகள்

செல்போன் கோபுரம்.

திருப்பூர் பாரதிநகரில் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

Published On 2023-07-25 10:30 GMT   |   Update On 2023-07-25 10:30 GMT
  • ‘எங்கள் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் பலர் வசித்து வருகிறோம்.
  • கதிர்வீச்சினால் குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் உள்ளது.

திருப்பூர்:

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் திருப்பூர் பிச்சம்பாளையம் வாழைத்தோட்டம் பாரதிநகர் வடக்கு பகுதியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில் 'எங்கள் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் பலர் வசித்து வருகிறோம்.

இந்தநிலையில் எங்கள் பகுதியில் குடியிருப்புக்கு மத்தியில் உள்ள ஒரு கட்டிடத்தின் 3-வது மாடியில் செல்போன் கோபுரம் அமைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. காற்று அதிகமாக வீசும் காலம் என்பதால் இந்த கோபுரம் உடைந்து விழும் அபாயம் உள்ளது. மேலும் அதிகப்படியான கதிர்வீச்சினால் குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் உள்ளது. எனவே செல்போன் கோபுரம் அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும்' என்று கூறியுள்ளனர்.

Tags:    

Similar News