உள்ளூர் செய்திகள்

வடுகபட்டியில் 12-ந் தேதி மின்தடை

Published On 2023-06-10 05:17 GMT   |   Update On 2023-06-10 05:17 GMT
  • பராமரிப்பு பணி நடக்கிறது.
  • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

தாராபுரம் :

தமிழ்நாடு மின்சார வாரியம் தாராபுரம் கோட்ட செயற்பொறியாளர் வ.பாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது :- வடுகபட்டி துணை மின் நிலையத்தில் 12-ந் தேதி பராமரிப்பு பணி நடக்கிறது.

இதனால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை வடுகபட்டி, குமாரபாளையம், மூக்குதரித்தான்பாளையம், சுள்ளி பெருக்கலாம்பாளையம், சம்மங்கரை, வண்ணாபட்டி, பட்டுத் துறை, வரப்பட்டி, நீலாங்காளிவலசு மற்றும் பி.ராமபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News