உள்ளூர் செய்திகள்

 பொங்கல் பூச்சாட்டு விழா நடைபெற்ற காட்சி.

வேலாயுதம்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா

Published On 2023-04-07 11:04 GMT   |   Update On 2023-04-07 11:04 GMT
  • கணபதி ஹோமம், கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது.
  • ஸ்ரீ மாரியம்மனுக்கு உச்சிகால பூஜை நடந்தது.

அவினாசி :

அவினாசி ஒன்றியம் வேலாயுதம்பாளையத்தில் பிரசித்திபெற்ற மகாமாரி யம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பொங்கல் பூச்சாட்டு விழா நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் நேற்று பொங்கல் விழா விமர்சையாக நடந்தது.

முன்னதாக கடந்த மாதம் 29-ந் தேதி கணபதி ஹோமம், கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. 4ந் தேதி அம்மனுக்கு சிறப்பு பூஜை, மற்றும் பூச்சட்டி எடுத்து ஆடுதல் நடந்தது. 5ந் தேதி படைக்கலம் எடுத்தல், அம்மனை அழைத்தல், கரகம் எடுத்தல் நடந்தது. 6-ந் தேதி காலை 5 மணிக்கு மாவிளக்கு எடுத்தல், ஸ்ரீ மாரியம்மனுக்கு உச்சிகால பூஜை நடந்தது. மாலை 3 மணிக்கு முளை ப்பாரி எடுத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. விழாவில் வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்த திரளா னோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News