உள்ளூர் செய்திகள் (District)

கோப்புபடம்

அவிநாசிக்கவுண்டம்பாளையம் மாகாளியம்மன் கோவிலில் பொங்கல் விழா - நாளை நடக்கிறது

Published On 2023-01-03 07:04 GMT   |   Update On 2023-01-03 07:04 GMT
  • 5 மணிக்கு மாவிளக்கு பூஜை, பொங்கல் விழா நடக்கிறது.
  • மாலை 3மணிக்கு அவிநாசி கோவிலில் இருந்து கோவிலுக்கு தீர்த்தம் எடுத்து வருவதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பூர்:

திருப்பூர் அவிநாசிகவுண்டம்பாளையம் ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் பொங்கல் விழா நாளை நடக்கிறது. இதையொட்டி நேற்று மாலை 3மணிக்கு அவிநாசி கோவிலில் இருந்து கோவிலுக்கு தீர்த்தம் எடுத்து வருவதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று இரவு 9மணிக்கு கங்கையில் இருந்து அம்மன் அழைத்து வருவல் (கும்பம் எடுத்தல்) நிகழ்ச்சி நடக்கிறது.

நாளை 4-ந்தேதி (புதன்கிழமை) அதிகாலை 3மணிக்கு அலங்கார பூஜை , 5 மணிக்கு மாவிளக்கு பூஜை, பொங்கல் விழா நடக்கிறது. மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை, இரவு 10மணிக்கு அம்மன் அழைத்து கங்கையில் விடுதல் (கும்பம் விடுதல்) நடக்கிறது.

நாளை மறுநாள் 5-ந்தேதி மதியம் 12மணிக்கு மஞ்சள் நீர் பூஜை நடக்கிறது. 6-ந்தேதி மாலை 7மணிக்கு அபிஷேக அலங்கார ஆராதனை பூஜை நடக்கிறது. 

Tags:    

Similar News