உள்ளூர் செய்திகள்
தடகள போட்டியில் திருப்பூர் வீரர்கள் சாதனை
- வீரர்கள் கலந்து கொண்டு ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றனர்.
- ஒலிம்பிக் வீரர்களை உருவாக்குவதே லட்சியம் என்று பயிற்சி யாளர் தெரிவித்தார்.
திருப்பூர் :
சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான தடகள போட்டி நடந்தது. இதில் திருப்பூர் ஆர்.எஸ்.ஜி., ஸ்போர்ட்ஸ் கிளப்பை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் அந்த கிளப்பின் பயிற்சியாளர் பிரபு மாரிமுத்துவுக்கு 15க்கும் மேற்பட்ட மாநில மற்றும் தேசிய விளையாட்டு வீரர்களை உருவாக்கியதற்காக சிறந்த பயிற்சியாளர் விருது வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் பல ஒலிம்பிக் வீரர்களை உருவாக்குவதே தனது லட்சியம் என்று பயிற்சியாளர் பிரபு மாரிமுத்து தெரிவித்தார்.