உள்ளூர் செய்திகள்
இறந்து கிடக்கும் பெண் மயிலை படத்தில் காணலாம்.
- மாலையில் பெண் மயில் ஒன்று இறந்து கிடந்தது
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பல்லடம் :
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீநகர் பகுதியில் உள்ள மின் மாற்றி அருகே நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலையில் பெண் மயில் ஒன்று இறந்து கிடந்தது. மின்மாற்றில் மோதி இறந்ததா? அல்லது மின்கம்பியில் மோதி இறந்ததா? என்பது குறித்து தெரியவில்லை. இது குறித்த தகவலின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.