உள்ளூர் செய்திகள்

கோப்புப்டம்.

பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணி நிரந்தரம் - ஒருங்கிணைப்பு குழு எதிர்பார்ப்பு

Published On 2023-04-01 07:56 GMT   |   Update On 2023-04-01 07:56 GMT
  • மாதம் 12 அரை நாட்கள் வேலை தரப்படுகிறது.
  • 5,000 ரூபாயும், தற்போது 10 ஆயிரம் ரூபாயும் ஊதியம் பெற்று வருகிறார்கள்.

தாராபுரம் :

பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையில் பகுதி நேர சிறப்பாசிரியர்க ளை பணி நிரந்தரம் செய்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட பகுதி நேர சிறப்பா சிரியர்கள் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் கூறியதாவது:- அனைவருக்கும் கட்டாய கல்வி சட்டத்தின் படி, ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ் 2012ல் மாநிலம் முழுவதும் 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர். ஓவியம், உடற்கல்வி, கணினி, இசை, தையல், தோட்டக்கலை, கட்டடக்கலை மற்றும் வாழ்க்கை கல்வி என 8 பாடங்களை இவர்கள் கற்பித்து வருகின்றனர். வாரத்தில் 3 அரை நாட்கள் வீதம், மாதம் 12 அரை நாட்கள் வேலை தரப்படு கிறது. தொடக்கத்தில் 5,000 ரூபாயும், தற்போது 10 ஆயிரம் ரூபாயும் ஊதியம் பெற்று வருகிறார்கள். தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வோம் என தி.மு.க., தெரிவித்தது. ஆனால் ஆண்டுகள் கடந்தும் எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை.

கடந்த 11 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து வரும் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News