உள்ளூர் செய்திகள்

ஆலோசனை கூட்டம் நடைபெற்ற காட்சி.

பரம்பிக்குளம் - ஆழியாறு பாதுகாப்பு இயக்கத்தின் ஆலோசனை கூட்டம்

Published On 2022-08-10 05:41 GMT   |   Update On 2022-08-10 05:41 GMT
  • ஆகஸ்டு 21-ந்தேதி நடைபெற உள்ள பேரணிக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
  • சுதந்திர தினத்தில் நடைபெற உள்ள கிராம சபை கூட்டங்களில் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றுவது.

பல்லடம் :

பரம்பிக்குளம் - ஆழியாறு பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டும் செல்லும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி ஆகஸ்டு 21-ந்தேதி நடைபெற உள்ள பேரணிக்கான ஆலோசனைக் கூட்டம் பல்லடத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், பரம்பிக்குளம் - ஆழியாறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஈசன், பி.ஏ.பி. பாசன சபை தலைவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் இந்தக் கூட்டத்தில், வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தில் பல்லடம் வட்டார பகுதியில் நடைபெற உள்ள கிராம சபை கூட்டங்களில், ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்து தீர்மானம் நிறைவேற்றுவது என்றும், கோரிக்கைக் பேரணியில், ஏராளமான விவசாயிகள் பொதுமக்கள் கலந்து கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டது.

Tags:    

Similar News