உள்ளூர் செய்திகள்

பனப்பாளையம் பகுதியில் குழாய் உடைப்பால் வீணாகிய குடிநீர்

Published On 2022-12-17 03:52 GMT   |   Update On 2022-12-17 03:52 GMT
  • நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
  • குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்தனர்.

பல்லடம் : 

பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை முதல் பல்லடம் பனப்பாளையம் வரை உள்ள சுமார் 12 கி.மீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பனப்பாளையம் பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகளின் போது அந்த வழியே செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.

இதனால் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வெளியேறி வீணானது. இது குறித்து தகவல் அறிந்த நகராட்சி பணியாளர்கள், குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்தனர்.

Tags:    

Similar News