உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

குன்னத்தூரில் ரூ.3¼ லட்சத்துக்கு கருப்பட்டி ஏலம்

Published On 2022-08-24 08:38 GMT   |   Update On 2022-08-24 08:38 GMT
  • திங்கட்கிழமை தென்னை மற்றும் பனங்கருப்பட்டி ஏலம் நடைபெறுவது வழக்கம்.
  • 4 ஆயிரம் கிலோ தென்னங் கருப்பட்டியை கொண்டு வந்திருந்தார்கள்.

குன்னத்தூர் :

குன்னத்தூரில் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட கருப்பட்டி கூட்டுறவு விற்பனை சம்மேளனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் திங்கட்கிழமை தென்னை மற்றும் பனங்கருப்பட்டி ஏலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் நடைபெற்ற ஏலத்திற்கு உற்பத்தியாளர்கள் 4 ஆயிரம் கிலோ தென்னங் கருப்பட்டியை கொண்டு வந்திருந்தார்கள். தென்னங்கருப்பட்டி கிலோ ரூ.85 வீதம் மொத்தம் ரூ.3 லட்சத்து 40 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இந்த தகவலை கூட்டுறவு கருப்பட்டி சம்மேளன மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைவர் தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் நகரம், கரூர் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் பருப்பு மறைமுக ஏல முறையில் விற்பனை நடைபெற்றது. இதில் காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 7 விவசாயிகள் 118 மூட்டைகள் (6,161 கிலோ) தேங்காய் பருப்பினை (கொப்பரை) விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

இதில் காங்கயம், வெள்ளகோவில், முத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 7 வியாபாரிகள் தேங்காய் பருப்புகளை வாங்க வந்திருந்தனர். இங்கு நடந்த ஏலத்தில் ரூ.4.45 லட்சத்திற்கு பருப்புகள் விற்பனையானது. தேங்காய் பருப்பு அதிக பட்சமாக ஒரு கிலோ ரூ.78-க்கும், குறைந்த பட்சமாக ரூ.58-க்கும், சராசரியாக ரூ.76-க்கும் ஏலம் போனது. ஏலத்திற்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஆர்.மாரியப்பன் செய்திருந்தார். 

Tags:    

Similar News