உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

கொரோனா பரிசோதனையை அதிகரிக்க உத்தரவு

Published On 2023-04-20 07:45 GMT   |   Update On 2023-04-20 07:45 GMT
  • 5 நாளில் 77 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
  • நாள் ஒன்றுக்கு 50 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது

திருப்பூர் :

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாத துவக்கத்தில் ஒற்றை இலக்கத்தில் பதிவாகிய பாதிப்பு, கடந்த 4நாட்களாக இரட்டை இலக்கத்துக்கு மாறியுள்ளது.

இதனால் 5 நாளில் 77 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை கண்காணி ப்பில் இருப்போரின் எண்ணிக்கை 90 ஐ எட்டியது. தினசரி பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனா பரிசோதனை களை அதிகப்படுத்த மாவட்ட மருத்துவத்துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நாள் ஒன்றுக்கு 50 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.இனி 100 முதல், 150 பேருக்கு பரிசோதனைகளை அதிகரிக்க அறிவுறுத்தப்ப ட்டுள்ளது.

Tags:    

Similar News