உள்ளூர் செய்திகள்

தடகள போட்டிக்கு தேர்வான மாணவர்கள்.

ஊத்துக்குளி எஸ். ஆர். மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான தடகள போட்டிக்கு தேர்வு

Published On 2023-09-06 07:35 GMT   |   Update On 2023-09-06 07:35 GMT
  • 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
  • மாணவர் பி. கிஷோர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்று முதலிடம் பெற்றார்.

ஊத்துக்குளி:

ஈரோடு மாவட்டம் பெருந்துறை குறுமைய தடகள விளையாட்டுப் போட்டிகள் விஜயமங்கலத்தில் உள்ள பாரதி மெட்ரிக் பள்ளியில் நடந்தது. இதில் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி எஸ்.ஆர். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். இளையோர் பிரிவில் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர் பி. கிஷோர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்று முதலிடம் பெற்றார்.

மேலும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். இதே போல் இதே பிரிவில் மாணவி ஆர். பிரியதர்ஷினி வலைப்பந்து போட்டியில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர்.

இவர்களை பள்ளியின் தாளாளர் கே.சந்திரகலா, தலைவர் பி.கருப்பண்ணன், செயலாளர் கே.வினோதினி,முதல்வர் டாக்டர் கே.ஹரிதேவன், உடற்கல்வி ஆசிரியர் பி.கதிரவன் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள்,மாணவ-மாணவிகள் வெகுவாக பாராட்டினர்.

Tags:    

Similar News