உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்பனை செய்த பாண்டியன்

பல்லடம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது

Published On 2022-06-12 09:04 GMT   |   Update On 2022-06-12 09:04 GMT
  • பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  • 1கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

பல்லடம்

பல்லடம் அருகேயுள்ள கள்ளக்கிணர் பகுதியில், கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தப் பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கள்ளக்கிணர் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தபோது அவர் சென்னை வடபழனியைச் சேர்ந்த பாண்டியன் (58) என்பதும் அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 1கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News