உள்ளூர் செய்திகள்
பல்லடம் அருகே கோவிலில் சாமி சிலைகள் உடைப்பு
- உடனடியாக காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
- போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிலைகள் உடைக்கப்பட்டது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கள்ளிப்பாளையத்தில் காலனி பகுதி உள்ளது. இங்கு மதுரைவீரன் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் சிலைகள் உள்ளது. இந்த சிலைகளில் சில சிலைகள் உடைக்கப்பட்டும் வேல்கள் பிடுங்கி எறியப்பட்டும் கீழே கிடந்தது. இதனைக் கண்ட அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து உடனடியாக காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிலைகள் உடைக்கப்பட்டது குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து சிலைகளை உடைத்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.