உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

அவிநாசியில் வட்டார போக்குவரத்து அலுவலக கட்டிடம் கட்ட வேண்டும் - ஓட்டுநா் பயிற்சிப்பள்ளி இயக்கத்தினா் கோரிக்கை

Published On 2022-09-26 06:45 GMT   |   Update On 2022-09-26 06:45 GMT
  • அதிக ஓட்டுநா் உரிமம், வாகனப் பதிவு நடைபெறும் இந்த அலுவலகம் மிகவும் பழுதடைந்த நிலையில், இடப்பற்றாக்குறையால் நெருக்கடியில் உள்ளது.
  • புதிய அலுவலக கட்டிடம் கட்ட பல கோடி ரூபாய் மதிப்பில் அவிநாசி வேலாயுதம்பாளையத்தில் ஈஸ்வரன், சுப்பிரமணி, பழனிசாமி ஆகியோா் 2.30 ஏக்கா் நிலம் தானமாக வழங்கினா்.

அவிநாசி:

அவிநாசியில் ஒருங்கிணைந்த வட்டார போக்குவரத்து அலுவலக கட்டிடம் கட்டவேண்டும் என ஓட்டுநா் பயிற்சிப்பள்ளி இயக்கத்தினா் செய்தித் துறை அமைச்சா் மு.பெ. சாமிநாதனிடம் மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில் அவா்கள் கூறியிருப்பது:- அவிநாசி சுற்றுப்பகுதியில் வாகனப் பெருக்கம், நகர வளா்ச்சி, மக்கள்தொகை காரணமாக தற்போது அரசு கலைக் கல்லூரி அருகே செயல்பட்டு வரும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் போதுமானதாக இல்லை. அதிக ஓட்டுநா் உரிமம், வாகனப் பதிவு நடைபெறும் இந்த அலுவலகம் மிகவும் பழுதடைந்த நிலையில், இடப்பற்றாக்குறையால் நெருக்கடியில் உள்ளது.

எனவே புதிய அலுவலக கட்டிடம் கட்ட பல கோடி ரூபாய் மதிப்பில் அவிநாசி வேலாயுதம்பாளையத்தில் ஈஸ்வரன், சுப்பிரமணி, பழனிசாமி ஆகியோா் 2.30 ஏக்கா் நிலம் தானமாக வழங்கினா். இதற்கு தமிழக அரசு கடந்த 2020 ல் ரூ. 2.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. எனினும், கட்டுமானப் பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனா்.

மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சா் மு.பெ. சாமிநாதன், வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுமானப் பணிகளை உடனடியாக தொடங்க கலெக்டர் வினீத்திடம் கேட்டுக்கொண்டாா்.

Tags:    

Similar News