உள்ளூர் செய்திகள்

அலகுமலை கோவிலில் கிருத்திகை பூஜை வழிபாடு நடைபெற்ற காட்சி.

அலகுமலை கோவிலில் கிருத்திகை பூஜை வழிபாடு

Published On 2023-04-23 07:32 GMT   |   Update On 2023-04-23 07:33 GMT
  • தங்கத்தேரோட்டத்தின்போது ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.
  • அட்சயத்திருதியை முன்னிட்டு எலுமிச்சை கனி மற்றும் ஒரு ரூபாய் நாணயமும் வழங்கப்பட்டது.

பல்லடம்:

திருப்பூா் மாவட்டம், பொங்கலூா் வட்டம், அலகுமலையில் உள்ள முத்துகுமார பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஆறுபடை முருகனுக்கும் தனித்தனி சன்னிதிகள் உள்ளன. இந்தக் கோவிலில் மூலவராக அருள்பாலிக்கும் முத்துகுமார பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு கிருத்திகையை ஒட்டி 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

முன்னதாக அா்த்தமண்டபம் முழுவதும் மலா் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும், தங்கத்தேரோட்டத்தின்போது ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். இதன் பின்னா் அலகுமலை கிருத்திகைக் குழு சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதுடன், அட்சயத்திருதியை முன்னிட்டு எலுமிச்சை கனி மற்றும் ஒரு ரூபாய் நாணயமும் வழங்கப்பட்டது. 

Tags:    

Similar News