உள்ளூர் செய்திகள்
பிரதோஷ வழிபாடு நடைபெற்ற காட்சி. 

உடுமலை சிவாலயங்களில் பிரதோஷ பூஜை

Published On 2023-10-13 17:10 IST   |   Update On 2023-10-13 17:10:00 IST
  • தேன், பன்னீர், கரும்புச்சர்க்கரை, சந்தனாதி தைலம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது.
  • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உடுமலை:

உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட தில்லை நகரில் ரத்தினலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு நேற்று பிரதோஷத்தை யொட்டி மூலவர் நந்தி உள்ளிட்ட கடவுள்களுக்கு சிறப்பு பூஜை நடை பெற்றது. அப்போது சந்தனம், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், பால், மஞ்சள், இளநீர், பழரசம், தேன், பன்னீர், கரும்புச்சர்க்கரை, சந்தனாதி தைலம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொணடு சிவன் நந்தியை பற்றி பக்தி பாடல்களை பாடி சாமி தரிசனம் செய்தனர். இதே போன்று உடுமலை பகுதியில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழாவை யொட்டி நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News