உள்ளூர் செய்திகள்

சிறு தானியங்கள். 

சத்துமிகு சிறு தானியங்கள் குறித்து விழிப்புணா்வு

Published On 2022-12-16 06:49 GMT   |   Update On 2022-12-16 06:49 GMT
  • வேளாண்மை அலுவலா்கள் செல்விசுஜி, சத்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
  • வினோத்குமாா், உதவி தொழில்நுட்ப மேலாளா் (அட்மா திட்டம்) பாலாஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருப்பூர்:

சத்துமிகு சிறு தானியங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் திட்ட விளக்க பிரசார வாகனங்கள் அவிநாசி வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டன.

பொதுமக்களிடம் சத்துமிகு சிறு தானியங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையிலும், விவசாயிகளுக்கு உற்பத்தி குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தவும் அவிநாசி வட்டார ஊராட்சிகளுக்கு வாகன பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதைத் தொடா்ந்து, அவிநாசி வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட மூன்று பிரசார வாகனங்களை வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமைத் தலைவா் சின்னக்கண்ணான் என்ற ஆறுமுகம், பேரூராட்சி மன்ற உறுப்பினா் சிவபிரகாஷ் ஆகியோா் கொடியசைத்து தொடங்கிவைத்தனா்.

வேளாண்மை அலுவலா்கள் செல்விசுஜி, சத்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா். உதவி அலுவலா்கள் சின்னராஜ், நாகராஜ், தினேஷ், சம்பத்குமாா், வினோத்குமாா், உதவி தொழில்நுட்ப மேலாளா் (அட்மா திட்டம்) பாலாஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Tags:    

Similar News