உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

அவினாசியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2022-11-21 03:44 GMT   |   Update On 2022-11-21 03:44 GMT
  • பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் கருப்புசாமி, பள்ளித் தலைமையாசிரியா் நிா்மலாதேவி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
  • முத்துசெட்டிபாளையம் திருவள்ளுவா் நினைவு அரசு துவக்கப் பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

அவினாசி:

உலக கழிவறை தினத்தை முன்னிட்டு அவிநாசி முத்துசெட்டிபாளையம் திருவள்ளுவா் நினைவு அரசு துவக்கப் பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.அவிநாசி பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா்.பேரூராட்சி சுகாதார ஆய்வாளா் கருப்புசாமி, பள்ளித் தலைமையாசிரியா் நிா்மலாதேவி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்கள் வராமல் தடுக்க கழிவறைகளை பயன்படுத்திய பிறகு சோப்பு கொண்டு கை கழுவதுதல், திறந்த வெளியில் மலம் கழித்தலை ஒழிக்கும் வகையில், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தனி நபா் கழிப்பிடம் அமைக்க ரூ. 8,000 மானியம் வழங்கப்படுவது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags:    

Similar News