உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.25 ஆயிரத்திற்கு தேங்காய் பருப்பு ஏலம்

Published On 2023-11-07 11:15 GMT   |   Update On 2023-11-07 11:15 GMT
  • காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான தேங்காய் பருப்புகள் ஏலம் போனது.
  • ஏலத்திற்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ரா.மாரியப்பன் செய்திருந்தார்.

முத்தூர்:

காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான தேங்காய் பருப்புகள் ஏலம் போனது.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் நகரம், கரூர் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு மறைமுக ஏல முறையில் விற்பனை நடைபெற்றது. இதில் காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 4 விவசாயிகள் 8 மூட்டைகள் (338 கிலோ) தேங்காய் பருப்பினை (கொப்பரை) விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

இதில் காங்கயம், வெள்ளகோவில், முத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 4 வியாபாரிகள் தேங்காய் பருப்புகளை வாங்க வந்திருந்தனர். இங்கு நடைபெற்ற ஏலத்தில் ரூ.25 ஆயிரத்திற்கு விற்பனையானது. தேங்காய் பருப்பு அதிக பட்சமாக ஒரு கிலோ ரூ.92-க்கும், குறைந்த பட்சமாக ரூ.50-க்கும், சராசரியாக ரூ.90- க்கும் ஏலம் போனது. ஏலத்திற்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ரா.மாரியப்பன் செய்திருந்தார். 

Tags:    

Similar News