உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.
அவிநாசிலிங்கம்பாளையத்தில் பனியன் நிறுவன ஊழியர் வீட்டில் கொள்ளை
- பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடி சென்றது தெரியவந்தது.
- இச்சம்பவம் குறித்து அவிநாசி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
அவிநாசி:
அவிநாசி அருகேயுள்ள அவிநாசிலிங்கம்பாளையம் பெரியாா் நகரை சோ்ந்தவா் நெல்லைராஜ் ( வயது 58), பனியன் நிறுவன அலுவலா். இவா் குடும்பத்துடன் வெளியூா் சென்றிருந்தார். பின்னா் வீடு திரும்பியுள்ளாா். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்துள்ளாா்.உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து அவிநாசி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்துக்கு வந்த போலீசாா், கைரேகை, தடயவியல் நிபுணா்கள் அங்கு பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனா்.மேலும், இச்சம்பவம் குறித்து அவிநாசி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.