உள்ளூர் செய்திகள்

பள்ளி முதல்வர் டயானா, ஒருங்கிணைப்பாளர் சக்தி மிருதுளா, கிளப் ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் ஆகியோர் மூலிகை செடிகளை நடும் காட்சி.

காந்திநகர் ஏ.வி.பி., பள்ளியில் இயற்கை பாதுகாப்பு தின நிகழ்ச்சி

Published On 2022-07-29 05:28 GMT   |   Update On 2022-07-29 05:28 GMT
  • மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் நினைவு நாள், உலக இயற்கை பாதுகாப்பு தின நிகழ்ச்சி பள்ளியின் நேச்சர் நியூட்டரர்ஸ் கிளப் சார்பில் நடைபெற்றது.
  • மூலிகை செடிகளின் பயன்களையும், அதனை பாதுகாக்கும் முறைகளையும் விளக்கினர்.

திருப்பூர் :

திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி.டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் நினைவு நாள், உலக இயற்கை பாதுகாப்பு தின நிகழ்ச்சி பள்ளியின் நேச்சர் நியூட்டரர்ஸ் கிளப் சார்பில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் கார்த்திக்கேயன், ஒருங்கிணைப்பாளர் லதா கார்த்திக்கேயன் கலந்து கொண்டனர். கிளப் ஆசிரியர்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் மூலிகை செடிகளை பள்ளி முதல்வர் டயானா, ஒருங்கிணைப்பாளர் சக்தி மிருதுளா ஆகியோர் வழங்கி மூலிகை செடிகளின் பயன்களையும், அதனை பாதுகாக்கும் முறைகளையும் விளக்கினர்.  

Tags:    

Similar News