உள்ளூர் செய்திகள்

மாணவிகள் சத்யா, நிஷாந்தி ஆகியோரை பள்ளி தலைவர் பெஸ்ட் எஸ்.ராமசாமி தலைமையில், துணை தலைவர்கள், செயலாளர், பொருளாளர், இணை செயலாளர் மற்றும் பள்ளி முதல்வர் பாராட்டி, வாழ்த்திய காட்சி. தெரிவித்தனர்.

தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி - கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளி மாணவிகள் சாதனை

Published On 2022-09-10 05:32 GMT   |   Update On 2022-09-10 05:32 GMT
  • பள்ளி விளையாட்டு மற்றும் செயல்பாடுகள் மேம்பாட்டு அமைப்பு சார்பில் டெல்லி நொய்டாவில் நடைபெற்றது.
  • முதல் பரிசான தங்கப் பதக்கத்தை மாணவிகள் வென்றனர்.

திருப்பூர் :

தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி பள்ளி விளையாட்டு மற்றும் செயல்பாடுகள் மேம்பாட்டு அமைப்பு சார்பில் டெல்லி நொய்டாவில் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் கலந்து கொண்ட திருப்பூர் அங்கேரிபாளையம் ரோடு கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் பிளஸ்-2 மாணவிகளான சத்யா, நிஷாந்தி ஆகியோர் போட்டியில் வெற்றி பெற்று, முதல் பரிசான தங்கப் பதக்கத்தை வென்றனர். தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவிகள் சத்யா, நிஷாந்தி ஆகியோரை பள்ளி தலைவரும், தாளாளருமான பெஸ்ட் எஸ்.ராமசாமி தலைமையில், துணை தலைவர்கள் டிக்சன் ஆர்.குப்புசாமி, பிவிஎஸ் பி.முருகசாமி, செயலாளர் கீதாஞ்சலி எஸ்.கோவிந்தப்பன், பொருளாளர் ஓகே எம்.கந்தசாமி, இணை செயலாளர் என்.டி.எம். என்.துரைசாமி மற்றும் பள்ளி முதல்வர் சுமதி, ஆசிரிய-ஆசிரியைகள், சக மாணவர்கள் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News