உள்ளூர் செய்திகள்

யாகபூஜை நடைபெற்ற காட்சி.

அல்லாளபுரம் உலகேஸ்வர சுவாமி கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா

Published On 2022-10-27 06:27 GMT   |   Update On 2022-10-27 06:27 GMT
  • கோவில் கும்பாபிஷேகம் கடந்த செப்டம்பர் மாதம் 9ம் நாள் சிறப்பாக நடைபெற்றது .
  • மண்டல பூஜையின் இறுதி நாளான 48ம் நாள் பூஜை நேற்று நடைபெற்றது.

பல்லடம் :

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் கரைப்புதூர் கிராமம் அல்லாளபுரத்தில்800 ஆண்டுகளுக்கு முன்னதாக சேர சோழ பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட உண்ணாமுலை அம்மன் உடனமர் ஸ்ரீ உலகேஸ்வர சுவாமி மற்றும் ஸ்ரீ கரிய காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த செப்டம்பர் மாதம் 9ம் நாள் சிறப்பாக நடைபெற்றது .அதனைத் தொடர்ந்து 48 நாள் மண்டல பூஜை நடைபெற்றது. மண்டல பூஜையின் இறுதி நாளான 48ம் நாள் பூஜை நேற்று நடைபெற்றது.

இதையொட்டி மாலை 5.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் விக்னேஸ்வர பூஜை ,புண்யாஹவாசனம் அதனை தொடர்ந்து உண்ணாமுலை அம்மனுக்கும் உலகேஸ்வர சுவாமி, கரியகாளியம்மனுக்கு 108 கலசபூஜையுடன் முதல்காலயாக பூஜை நிறைவுற்றது.

இன்று காலை 7.35மணிக்கு இரண்டாம் காலபூஜை தொடங்கி உண்ணாமுலை அம்மனுக்கு 108 கலசாபிஷேகமும் உலகேஸ்வர சுவாமிக்கு 108 சங்காபிஷேகமும் , கரியகாளியம்மனுக்கு 108 கலசாபிஷேகமும் நடைபெற்று இறுதியாக தீபாராதனை நடைபெற்றது. பின்னர் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News