உள்ளூர் செய்திகள்

மழலையர் கிருஷ்ணராகவும் ராதையாகவும் வேடமணிந்த காட்சி.

ஜெய்சாரதா மெட்ரிக் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

Published On 2022-08-19 05:53 GMT   |   Update On 2022-08-19 05:53 GMT
  • மழலையர் பிரிவு( எல். கே.ஜி, யு. கே. ஜி ) மாணவர்கள் கண்ணன்களாகவும் ராதைகளாகவும் வேடமிட்டு அசத்தினர்.
  • கீதையின் சுலோகங்களை மழலை மொழியில் ஒப்புவித்து அசத்தினர்.

திருப்பூர் :

திருப்பூர் 15 வேலம்பாளையம் ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. மழலையர் பிரிவு( எல். கே.ஜி, யு. கே. ஜி ) மாணவர்கள் கண்ணன்களாகவும்ராதைகளாகவும் வேடமிட்டு கீதையின் சுலோகங்களை மழலை மொழியில் ஒப்புவித்து அசத்தினர்.

ஒவ்வொரு மாணவரும் கிருஷ்ணர்களாகவும், மாணவிகள் ராதையாகவும் வேடமணிந்து இருந்தது மிகவும் கவர்ந்தது. இந்நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளர் நிக்கான்ஸ் வேலுச்சாமி, செயலாளர் கீர்த்திகாவாணிசதிஷ், பொருளாளர் சுருதி வேலுசாமி, பள்ளி முதல்வர் ஏ.எஸ். மணிமலர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News