உள்ளூர் செய்திகள்

கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளியில் சி.ஏ.படிப்பிற்கான வழிகாட்டி நிகழ்ச்சி

Published On 2022-11-28 07:22 GMT   |   Update On 2022-11-28 08:02 GMT
  • சி.ஏ, குறித்த மாணவ-மாணவிகள் கருத்துகள் மற்றும் விளக்கங்கள் கேட்டு தெரிந்துகொண்டனர்.
  • 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

 திருப்பூர் : 

திருப்பூர் அங்கேரிபாளையம் ரோட்டில் அமைந்துள்ள கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பட்டயக் கணக்காளர் சங்கத்தின் தென்னிந்திய குழுவின் சார்பில் சி.ஏ, படிப்புக்கான வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் எஸ்.செந்தில்பிரபு, மனோகரன், ரூபிணி, மகேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். பள்ளி முதல்வர் ஜெ.சுமதி வரவேற்று பேசினார். செயலாளர் கீதாஞ்சலி எஸ்.கோவிந்தப்பன் சிறப்புரையாற்றினார். சி.ஏ, குறித்த மாணவ-மாணவிகள் கருத்துகள் மற்றும் விளக்கங்கள் கேட்டு தெரிந்துகொண்டனர். முடிவில் துைண முதல்வர் விஜயா வாழ்த்தி பேசினார்.

Tags:    

Similar News