உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

திருப்பூா் நிப்ட்-டீ கல்லூரியில் கேரள கல்லூரி மாணவா்களுக்கு பின்னலாடை தொழில்நுட்ப பயிற்சி

Published On 2023-06-06 04:43 GMT   |   Update On 2023-06-06 04:43 GMT
  • பயிற்சி வகுப்பு கடந்த மே 29 ந் தேதி தொடங்கி ஜூன் 3 -ந் தேதி வரை நடைபெற்றது.
  • ஆடை தயாரிப்பு குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

திருப்பூர் :

திருப்பூா் நிப்ட்-டீ கல்லூரியில் கேரளத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா்களுக்கு பின்னலாடைத் தொழில்நுட்பம் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. கேரள மாநிலம், கோட்டயத்தில் உள்ள அஷம்ப்ஸ்சன் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.எஸ்.சி. பேஷன் டிசைனிங் படித்து வரும் 23 மாணவா்களுக்கு பின்னலாடைத் தொழில்நுட்பம் குறித்த பயிற்சி திருப்பூா் நிப்ட்-டீ கல்லூரியில் அளிக்கப்பட்டது. பயிற்சி வகுப்பு கடந்த மே 29 ந் தேதி தொடங்கி ஜூன் 3 -ந் தேதி வரை நடைபெற்றது. பயிற்சி வகுப்பில் நிட்டிங் இயந்திரங்களின் செயல்பாடுகள், ஆடை தயாரிப்பு குறித்த செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்தப் பயிற்சியின் நிறைவு விழா மற்றும் மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில், கல்லூரியின் பேஷன் அப்பேரல் மேனேஜ்மென்ட் துறைத் தலைவா் கோபாலகிருஷ்ணன் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் கே.பி.பாலகிருஷ்ணன் தலைமை வகித்து மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கினாா். நிகழ்ச்சியில் கல்லூரி உதவிப் பேராசிரியை அனிதா ரேச்சல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News