உள்ளூர் செய்திகள்

ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றக்  காட்சி.

காங்கயம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

Published On 2023-10-04 16:22 IST   |   Update On 2023-10-04 16:22:00 IST
  • வருகிற 15-ந் தேதி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி காங்கயம் வருகிறார்.
  • கூட்டத்திற்கு என்.எஸ்.என்.நட்ராஜ் வரவேற்புரை ஆற்றினார்

காங்கயம்:

காங்கயம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி ஆலோசனைக்கூட்டம் காங்கயம் சென்னிமலை சாலை என்.எஸ்.என்.அரங்கில் நடைபெற்றது.கூட்டத்திற்கு பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி "வாக்குச்சாவடிகளில் பொறுப்பாளர்களை நியமிப்பது குறித்தும், வருகிற 15-ந் தேதி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி காங்கயம் வருகின்ற காரணத்தினால் முன்னேற்பாடுகள் செய்வது குறித்தும் பேசினார். கூட்டத்திற்கு என்.எஸ்.என்.நட்ராஜ் வரவேற்புரை ஆற்றினார்.

கூட்டத்தில் காங்கயம் நகர செயலாளர் வெங்கு ஜி. மணிமாறன், திருப்பூர் மாநகர மாவட்ட பொருளாளர் கிஷோர் குமார்,

மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் முருகவேல், வெள்ளகோவில் நகர செயலாளர் டீலக்ஸ் மணி, குண்டடம் ஒன்றிய செயலாளர் எம்.பி.சண்முகசுந்தரம், வெள்ளகோவில் ஒன்றிய செயலாளர் எஸ்.என்.முத்துக்குமார், சென்னிமலை பேரூர் செயலாளர் கோபாலகிருஷ்ணன், நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், வார்டு உறுப்பினர்கள், மகளிர் அணி, கூட்டுறவு சங்க நிர்வாகிகள், பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News