உள்ளூர் செய்திகள்

 தங்கமயில் ஜுவல்லரி திறப்பு விழா நடைபெற்ற காட்சி.

திருப்பூரில் புதுப்பிக்கப்பட்ட தங்கமயில் ஜுவல்லரி திறப்பு விழா

Published On 2022-10-02 06:11 GMT   |   Update On 2022-10-02 06:11 GMT
  • திருப்பூரின் மிக முக்கிய ஜூவல்லரிகளின் தேர்வுகளில் முதலாவதாக தங்கமயில் ஜூவல்லரி மாறி இருக்கிறது.
  • தங்க மாங்கல்யம் எனும் தனித்துவமான திருமண நகை கலெக்ஷன்களையும் அறிமுகப்படுத்தியது.

திருப்பூர் :

தங்கமயில் ஜூவல்லரி கடந்த 30 ஆண்டுகளாக தங்க நகை விற்பனையில் தனக்கென தனி ஒரு அடையாளத்தை பதித்துள்ளது. ஆடை உலகம் திருப்பூர் விரும்பும் ஆபரண உலகமாக திகழும் தங்கமயில் ஜூவல்லரி மிகச்சிறந்த நகைகளை மிகக்குறைந்த சேதாரத்தில் வழங்கி வருகிறது.

ஆகையால் திருப்பூரின் மிக முக்கிய ஜூவல்லரிகளின் தேர்வுகளில் முதலாவதாக தங்கமயில் ஜூவல்லரி மாறி இருக்கிறது. தற்போது திருப்பூர் தங்கமயில் ஜூவல்லரி முற்றிலும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட தங்கமயில் ஜுவல்லரி திறப்பு விழா இன்று நடைபெற்றது.

விழாவிற்கு தங்கமயில் ஜுவல்லரி நிர்வாக இயக்குனர் பலராம கோவிந்த தாஸ், இணை நிர்வாக இயக்குனர்கள் பா.ரமேஷ், என்.பி.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுப்பிக்கப்பட்ட ஷோரூமை தொழில் அதிபர் பாண்டீஸ்வரன் ரத்தினம்மாள் திறந்து வைத்தார். தொழிலதிபர்கள் ரமணி ரமேஷ், சோபியா பரமேஸ்வரன், திவ்யா ரமேஷ், ரஜினிகாந்த், கிராம நிர்வாக அதிகாரி சித்ரா விஜயராஜ் ஆகியோர் குத்து விளக்கேற்றி வைத்தனர்.

திறப்பு விழாவின் மிக முக்கிய அம்சமாக தங்கமயில் ஜூவல்லரி ஷோரூம் தனது பிரத்தியேக பிரைடல் ஸ்டோரை அறிமுகப்படுத்தி அதில் தங்க மாங்கல்யம் எனும் தனித்துவமான திருமண நகை கலெக்ஷன்களையும் அறிமுகப்படுத்தியது.

Tags:    

Similar News