உள்ளூர் செய்திகள்
அவினாசி பேரூராட்சியில் ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சிறுவர் பூங்கா திறப்பு
- மானிய திட்டத்தில் 20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய சிறுவர் பூங்கா நேற்று திறந்து வைக்கப்பட்டது.
- தனலட்சுமி பொன்னுசாமி பூங்காவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
அவினாசி:
திருப்பூர் மாவட்டம் அவினாசி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் 5வது வார்டுக்கு உட்பட்ட நியூ டவுன் பகுதியில் 15 வது நிதி குழு மானிய திட்டத்தில் 20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய சிறுவர் பூங்கா நேற்று திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி துணைத் தலைவர் மோகன் தலைமை தாங்கினார்.
செயல் அலுவலர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார்.பேரூராட்சி தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி பூங்காவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் சிறுவர்கள், சிறுமியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.