உள்ளூர் செய்திகள்

சாமளாபுரம் பேரூராட்சியில்  தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி  

Published On 2022-12-01 04:03 GMT   |   Update On 2022-12-01 04:03 GMT
  • என் குப்பை எனது பொறுப்பு தலைப்பின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
  • மக்கும் குப்பை ,மக்காத குப்பை அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மங்கலம் :

திருப்பூர் மாவட்டம்,சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பெருமாம்பாளையம் பகுதியில் "நகரங்களின் தூய்மையான மக்கள் இயக்கம்" திட்டத்தின் சார்பில் என் குப்பை எனது பொறுப்பு தலைப்பின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகா பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.

சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகா பழனிச்சாமி பொதுமக்களிடம் மக்கும் குப்பை ,மக்காத குப்பை பிரித்து தர வேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதில் சாமளாபுரம் பேரூராட்சி மன்றதுணைத்தலைவர் குட்டிவரதராஜன் , சாமளாபுரம் பேரூராட்சி 7-வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ணவேணி, முன்னாள் வார்டு கவுன்சிலர் பொன்னுச்சாமி, மற்றும் அனைத்து வார்டு கவுன்சிலர்கள் , மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சாமளாபுரம் பேரூராட்சி தூய்மை பணியாளர்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரித்து வழங்கிய பெருமாம்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு  வழங்கப்பட்டது . 

  

Tags:    

Similar News