உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

திருப்பூரில் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி நாளை நடக்கிறது

Published On 2023-05-24 11:46 GMT   |   Update On 2023-05-24 11:46 GMT
  • காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது.
  • வெள்ளாடு வளா்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பங்கேற்று கொள்ளலாம்.

திருப்பூர் :

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கான வெள்ளாடு வளா்ப்பு தொடா்பான பயிற்சி நாளை 25-ந்தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவா் ஆா்.மதிவாணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வெள்ளாடு வளா்ப்பு தொடா்பான பயிற்சி நாளை ( வியாழக்கிழமை) காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது.மாவட்டத்தில் வெள்ளாடு வளா்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இந்தப் பயிற்சியில் பங்கேற்று தங்களது சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News