உள்ளூர் செய்திகள்

மாணவர்களால் புஷ்பாஞ்சலி செய்யப்பட்ட காட்சி.

விவேகானந்தர் உருவச்சிலைக்கு மாலை

Published On 2022-09-12 12:03 GMT   |   Update On 2022-09-12 12:03 GMT
  • சிகாகோ சொற்பொழிவின் 129 ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
  • விவேகானந்தர் உருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.

திருப்பூர் :

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவின் 129 ஆம் ஆண்டு விழா, திருமுருகன்பூண்டி, ஸ்ரீ விவேகானந்த சேவாலயத்தில் கொண்டாடப்பட்டது. இதில் விவேகானந்தர் உருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.

மாணவர்களால் புஷ்பாஞ்சலி செய்யப்பட்டது. நிர்வாக அறங்காவலர் சுவாமி விவேகானந்தர் பற்றி சிறப்புச் சொற்பொழிவு செய்தார். குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் கலந்து கொண்டனர்.அர்ச்சனை, ஆரத்தி மற்றும் பஜனை நடைபெற்றது. அனைவருக்கும் விவேகானந்தர் நூல்கள் வழங்கப்பட்டன. அன்னதானமும் நடைபெற்றது.

Tags:    

Similar News